» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மின் கம்பத்திலிருந்து அறுந்து கிடந்த மின்வயர் : மின்சாரம் தாக்கி விவசாயி பலி!

செவ்வாய் 16, ஜனவரி 2024 11:03:07 AM (IST)

சிவகிரி அருகே மின்சாரம் தாக்கி வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி பரிதாபமாக பலியானார்.

சிவகிரி அருகே தேவிபட்டணம் கீழூர் ராமசாமி புரத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் கணேசன் (37). விவசாயி. இவர் தனது மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக வயலுக்குச் சென்றுள்ளார். ராஜதுரை என்பவரின் வயலில் புல் அறுத்துக் கொண்டிருந்தபோது அங்கு மின் கம்பத்திலிருந்து வயர் அறுந்து கிடந்ததில் எதிர்பாராத விதமாக மிதித்துள்ளார். 

இதனால் மின்சாரம் தாக்கி கணேசன் அதே இடத்தில் பரிதாபமாக இருந்தார். இது குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory