» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருமணம் நிச்சயிக்கப்பட்ட காவலர் தூக்கிட்டு தற்கொலை: தென்காசி அருகே சோகம்!

திங்கள் 19, பிப்ரவரி 2024 4:05:01 PM (IST)

தென்காசி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் காவலர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி மகன் மூர்த்தி (30). இவர்  செங்கோட்டை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் பேசி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு மூர்த்தி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு பேசி முடிக்கப்பட்ட பெண் மாப்பிள்ளையை திருமணம் செய்ய விருப்பமில்லை என கூறியதால் மனம் உடைந்த மூர்த்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory