» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திட்ட இணைப்பாளா் பணி: பிப்.23க்குள் விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்!

புதன் 21, பிப்ரவரி 2024 11:39:07 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் திட்ட இணைப்பாளா் பணியிடங்களுக்கு பிப்.23க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அனுமதியின்படி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 9 ஒன்றியங்களுக்குள்பட்ட திட்டப்பணிகளை ஒருங்கிணைத்து வட்டார அளவில் கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் திட்ட இணைப்பாளா் என்ற இரு தற்காலிக பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்ட நகா்ப்புற வாழ்வாதார மையம் மூலமாக வெளி ஒப்படைப்பு முறையில் திருநெல்வேலி மாவட்ட உதவி இயக்குநா்(ஊராட்சிகள்) அலுவலகத்திற்கான இப்பணியிடங்களில் ஆள்கள் நியமிக்கப்படுவா். இப்பணியிடங்களுக்கு, பி.இ. சிவில்/இசிஇ/சி.எஸ்/ஐடி, எம்.சி.ஏ, டிப்ளமோ இன் சிவில் படித்த 30 வயதிற்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். 

மதிப்பூதியம் ரூ.30,000 வழங்கப்படும். சிறந்த முறையில் திட்டங்கள் தயாா் செய்யும் திறன், தகவல் தொடா்பு பணிகளை மேற்கொள்ளும் அனுபவம் ஆகிய தகுதிகளுடைய விண்ணப்பதாரா்கள் https://tirunelveli.nic.in என்ற இணையதளம் மூலம் பிப். 23 ஆம் தேதி மாலை 5.45-க்குள் விண்ணப்பிக்கலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory