» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

2 வயது மகனை கொன்று கிணற்றில் விழுந்து கர்ப்பிணி பெண் தற்கொலை!

புதன் 21, பிப்ரவரி 2024 8:24:22 PM (IST)

சிவகிரி அருகே 2 வயது மகனை கிணற்றில் வீசி கொன்று விட்டு கர்ப்பிணி பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் தேவர் மண்டபம் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி காளீஸ்வரி (வயது 23). இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் கவி பிரகாஷ் (2) என்ற மகன் இருந்தான். மாரியப்பன் வேறு ஒரு பெண்ணுடன் போனில் பேசி வந்துள்ளார். இதனால் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்த காளீஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

வேறு பெண்ணுடன் போனில் பேசுவதை காளீஸ்வரி கண்டித்தும் மாரியப்பன் அதனை கேட்கவில்லையாம். இதனால் மன வேதனை அடைந்த காளீஸ்வரி நேற்று தனது இரண்டு வயது மகனை அழைத்துக் கொண்டு  ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ள சுகுமார் என்பவரின் கிணற்று பகுதிக்கு சென்றுள்ளார். தனது இரண்டு வயது மகன் கவி பிரகாஷை கிணற்றில் வீசி கொலை செய்த காளீஸ்வரி பின்னர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

அப்பகுதியில் சென்ற ராமர் என்பவர் கிணற்றில் பெண் உடலும், சிறுவன் உடலும் மிதப்பதை கண்டு சிவகிரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடல்களை மீட்க வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இருந்து காளீஸ்வரி மற்றும் அவரது இரண்டு வயது மகன் கவிபிரகாஷ் உடல்களை மீட்டனர். 

மீட்கப்பட்ட உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவருடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு வயது மகனை கிணற்றில் வீசி கொன்று விட்டு கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிவகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory