» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மது குடித்ததை மனைவி கண்டித்ததால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை!!
திங்கள் 4, மார்ச் 2024 9:51:23 AM (IST)
வாசுதேவநல்லூர் அருகே விஷம் குடித்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே நாராணபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கையா தேவர் மகன் ராமகிருஷ்ணன் (58). விவசாயி . இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவரின் நாலு பிள்ளைகளில் ஒரு மகன் ஊட்டி போலீசில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகன் நெல்லையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
நேற்று உறவினர் இறந்ததற்கான விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ராமகிருஷ்ணன் அளவுக்கு அதிகமாக மது குடித்தருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த ராமகிருஷ்ணன் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆய்வாளர் (பொ) சண்முக லட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

குற்றால அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:12:10 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)

இரட்டிப்பு லாபம்: ஆசை வார்த்தை கூறி கல்லுாரி முதல்வரிடம் ரூ.17 லட்சம் மோசடி!
சனி 18, அக்டோபர் 2025 9:34:54 PM (IST)

கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு: நெல்லையில் பரிதாபம்!
சனி 18, அக்டோபர் 2025 5:25:48 PM (IST)

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)
