» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையப்பா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வெள்ளி 15, மார்ச் 2024 10:46:00 AM (IST)
திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று (மாா்ச் 15) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான திருவிழா கொடியேற்றம், இன்று (மாா்ச் 15) வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நான்காம் திருநாளான இம் மாதம் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வு நடைபெறும். மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூா்த்திகளுடன் திருவீதியுலா நடைபெறுகிறது. இம் மாதம் 24 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து பங்குனி உத்திர செங்கோல் விழா நடைபெற உள்ளது.
பங்குனி உத்திர திருவிழாவில் இரண்டாம் நாளில் இருந்து ஒன்பதாம் திருநாள் வரை தினமும் மாலை 6.30 மணியளவில் திருக்கோயிலில் உற்சவா்கள் வைக்கப்பட்டிருக்கும் உற்சவா் மண்டபத்தில் உடையவா் லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அ.அய்யா் சிவமணி மற்றும் ஊழியா்கள் செய்து வருகிறாா்கள்.