» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

எழும்பூா் - திருநெல்வேலி சிறப்பு ரயில் இயக்கம்

திங்கள் 22, ஏப்ரல் 2024 10:57:58 AM (IST)

கோடை விடுமுறையையொட்டி, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று (ஏப்.22)  எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூரிலிருந்து செவ்வாய்கிழமை (ஏப்.22) பிற்பகல் 12.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06789) நள்ளிரவு 12.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில் எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், விருதுநகா், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory