» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அகஸ்தியர் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

திங்கள் 22, ஏப்ரல் 2024 12:16:37 PM (IST)

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்  கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவியும் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.

தற்போது கோடையில் கடும் வெயில் சுட்டெரிக்கும் நிலையிலும், அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அகஸ்தியர் அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் -சுற்றுலா பயணிகள் உற்சாகம்வார விடுமுறை தினமான நேற்று அகஸ்தியர் அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கார், வேன்களில் குடும்பத்தினர், உறவினர்களுடன் வந்தனர். அவர்கள் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory