» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வைரக்கல் இருப்பதாக பாறை உடைப்பு: ஜேசிபி ஆபரேட்டர் கைது
வெள்ளி 8, நவம்பர் 2024 12:32:47 PM (IST)
ஏர்வாடி அருகே வைரக்கல் இருப்பதாகக் கூறி குளத்து பாறையை உடைத்த ஜேசிபி ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் கருத்தானேரி குளத்தில் ஆங்காங்கே சின்ன சின்ன பாறைகள் உள்ளன. அவற்றில் வைரக்கல் இருப்பதாக கூறி மர்ம நபர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் பாறையை உடைத்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் முருகம்மாள் ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீசார் குளத்திற்கு சென்றனர். அவர்களைப் பார்த்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பொக்லைன் ஆபரேட்டர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில் அவர் மதுரை அருகேயுள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜாராம் மகன் கணேசன்(23) எனத் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)
