» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

தென்காசியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான சாய் சரவணன் வழிகாட்டுதலின் பேரில், தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி.ராஜவேல் தலைமையில் தென்காசி முதன்மை சார்பு நீதிபதியும் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவருமான ஏ. பிஸ்மிதா முன்னிலையில் தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில் தென்காசி கூடுதல் சார்பு நீதிபதி எஸ்.முருகவேல், தென்காசி முதன்மை மாவட்ட உரிமையியல் நிதிபதி ஜெ. ராஜேஷ்குமார், தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி எஸ் முத்துலெட்சுமி குற்றவியல் நடுவர் நீதிபதி எஸ் முத்துலட்சுமி, தென்காசி கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கே என். குரு, ஓய்வு பெற்றநீதிபதிகள் எஸ் தங்கக்கனி, பி. முருகையா மற்றும் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 4 கோடி 45 லட்சத்து 25 ஆயிரத்து 681 ரூபாய் மதிப்புள்ள 241 வழக்குகளும், நீதி மன்றத்திற்கு முன் வரும் வங்கி வழக்கு 53,70,816 ரூபாய் மதிப்புள்ள 114 வழக்குகளும் மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப் பெற்றது. சங்கரன்கோவில் மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 37,11,100 ரூபாய் மதிப்புள்ள 681 வழக்குகளும். நீதிமன்றத்திற்கு முன்வரும் வங்கி வழக்கு 24,80,741 மதிப்புள்ள 46 வழக்குகளும் சமரசமாக முடிக்கப்பெற்றது.
ஆலங்குளம் மக்கள் நிதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 48,58,150 ரூபாய் மதிப்புள்ள 27| வழக்குகள் சமரசமாக முடிக்கப்பெற்றது. சிவகிரி மக்கள் நீதிமன்றத்தில் 5,42,700 ரூபாய் மதிப்புள்ள 126 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப் பெற்றது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 6,09 ,700 ரூபாய் மதிப்புள்ள 152 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப் பெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மே 4-ல் வாக்கு எண்ணிக்கை: வேட்பாளர்கள், முகவர்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு!
வெள்ளி 1, மே 2026 12:27:16 PM (IST)

வெப்ப அலையிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவுரை!
வெள்ளி 1, மே 2026 10:30:26 AM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: டீ மாஸ்டருக்கு 16 ஆண்டு சிறை – போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 1, மே 2026 8:50:14 AM (IST)

சி.ஆர்.பி.எப் காவலர் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு : இளைஞர்கள் பயன்பெறலாம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:35:16 PM (IST)

தாய்-மகன் வெட்டப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது; இருதரப்பு மோதல் - எஸ்பி நேரில் ஆய்வு
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:52:27 AM (IST)

வாக்களிக்கச் சென்றவர் சாலை விபத்தில் உயிரிழப்பு : குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரிக்கை!
புதன் 29, ஏப்ரல் 2026 12:15:23 PM (IST)


