» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் தொழில் அதிபர் வீட்டில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
சனி 9, நவம்பர் 2024 8:55:15 AM (IST)
நெல்லையில் தொழில் அதிபர் வீட்டில் நேற்று 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
நெல்லை வண்ணார்பேட்டை இந்திரா காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். மாட்டு எலும்புகளை அரைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். கடந்த 6-ந்தேதி மதுரை வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் இவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
நேற்று முன்தினம் 2-வது நாளாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நேற்று 3-வது நாளாகவும் இந்த சோதனை நடைபெற்றது. காலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் வெங்கடேஷ் வீட்டுக்கு வந்தனர். அங்கு கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், தொழில் வருமான விவரம், சொத்து மதிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
மேலும் அவரது வங்கிக் கணக்கு, பணம் இருப்பு, பணப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களையும் பார்வையிட்டனர். இதில் வரி ஏய்ப்பு ஏதேனும் நடந்துள்ளதா? எனவும் விசாரணை நடத்தினர். 3-வது நாளாக நடந்த இந்த சோதனையால் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)

தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் 100 பவுன் நகை, ரூ.20 லட்சம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
திங்கள் 30, ஜூன் 2025 8:40:03 AM (IST)
