» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் தொழில் அதிபர் வீட்டில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
சனி 9, நவம்பர் 2024 8:55:15 AM (IST)
நெல்லையில் தொழில் அதிபர் வீட்டில் நேற்று 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
நெல்லை வண்ணார்பேட்டை இந்திரா காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். மாட்டு எலும்புகளை அரைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். கடந்த 6-ந்தேதி மதுரை வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் இவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
நேற்று முன்தினம் 2-வது நாளாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நேற்று 3-வது நாளாகவும் இந்த சோதனை நடைபெற்றது. காலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் வெங்கடேஷ் வீட்டுக்கு வந்தனர். அங்கு கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், தொழில் வருமான விவரம், சொத்து மதிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
மேலும் அவரது வங்கிக் கணக்கு, பணம் இருப்பு, பணப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களையும் பார்வையிட்டனர். இதில் வரி ஏய்ப்பு ஏதேனும் நடந்துள்ளதா? எனவும் விசாரணை நடத்தினர். 3-வது நாளாக நடந்த இந்த சோதனையால் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழர்களின் தொன்மையை உலகறிய செய்யும் பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் பெருமிதம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 10:48:02 AM (IST)

திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை பணிகளின் தரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!!
சனி 20, டிசம்பர் 2025 9:20:36 PM (IST)

மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சனி 20, டிசம்பர் 2025 8:40:10 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

