» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் தொழில் அதிபர் வீட்டில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
சனி 9, நவம்பர் 2024 8:55:15 AM (IST)
நெல்லையில் தொழில் அதிபர் வீட்டில் நேற்று 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
நெல்லை வண்ணார்பேட்டை இந்திரா காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். மாட்டு எலும்புகளை அரைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். கடந்த 6-ந்தேதி மதுரை வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் இவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
நேற்று முன்தினம் 2-வது நாளாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நேற்று 3-வது நாளாகவும் இந்த சோதனை நடைபெற்றது. காலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் வெங்கடேஷ் வீட்டுக்கு வந்தனர். அங்கு கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், தொழில் வருமான விவரம், சொத்து மதிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
மேலும் அவரது வங்கிக் கணக்கு, பணம் இருப்பு, பணப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களையும் பார்வையிட்டனர். இதில் வரி ஏய்ப்பு ஏதேனும் நடந்துள்ளதா? எனவும் விசாரணை நடத்தினர். 3-வது நாளாக நடந்த இந்த சோதனையால் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)

கோவிலில் வாலிபரை வெட்டிக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 8:33:36 AM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)
