» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளையங்கோட்டையில் பாலம் கட்டும் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!
வெள்ளி 28, பிப்ரவரி 2025 10:16:58 AM (IST)
பாளையங்கோட்டை பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற உள்ளதால் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நெல்லை மாநகரத்தில் பாளை போக்குவரத்து பிரிவிற்குட்பட்ட பகுதியில் முருகன்குறிச்சி சந்திப்பிலிருந்து மார்க்கெட் சந்திப்பு வரையிலும், சமாதானபுரம் சந்திப்பிலிருந்து நீதிமன்றம் சந்திப்பு வரையிலும் நெல்லை மாவட்ட நெடுஞ்சாலைத் துறையினரால் 6 புதிய பெட்டிப்பாலம் கட்டும் பணி துவங்க உள்ளது.
இந்த பணிகள் நாளை மார்ச் 1ம் தேதி முதல் வரும் 20ம் தேதி வரை 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறஉள்ளது. இதனால் இச்சாலைகளை பயன்படுத்தி வருகிற இலகு ரக வாகனங்கள், பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் கீழ்கண்டவாறு மாற்றுப் பாதையை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட் டுக்கொள்ளப்படுகிறது.
அதன்படி, பாளை கேடிசி நகர் - சீனி வாசநகர் வழியாக சமாதானபுரம், பாளை பேருந்து நிலையம் வழியாக வரும் வாகனங்கள், மாற்றுப்பாதையாக பாளை கேடிசி நகர் சீனிவாசநகர் வழியாக அரசு சிறப்பு மருத்துவமனை, ஹைகிரவுண்ட் ரவுண்டானா வழியாக பாளை பேருந்து நிலையம் செல்ல வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள் ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)
