» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மதுவில் விஷம் கலந்து குடித்து வக்கீல் தற்கொலை: போலீசார் விசாரணை

ஞாயிறு 2, மார்ச் 2025 11:00:59 AM (IST)

நெல்லையில் மதுவில் விஷம் கலந்து குடித்து வக்கீல் தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை வண்ணார்பேட்டை திருக்குறிப்பு தொண்டர் தெருவை சேர்ந்தவர் பொன்னையா மகன் கணேசன் (33), வக்கீல். இவருடைய மனைவி குடும்ப பிரச்சினையால் கணேசனை பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் கணேசன் தூங்கிய அறையின் கதவு திறக்கப்படவில்லை. 

இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய பெற்றோர் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் எந்த பதிலும் வராததால், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.அப்போது கணேசன் வாயில் நுரை தள்ளியவாறு உடல் அசைவற்று கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சலிட்டனர். இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசாரும் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது கணேசன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory