» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு மையங்களில் ஆட்சியர் சுகுமார் ஆய்வு
புதன் 5, மார்ச் 2025 12:42:37 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முழுவதும் 11-ம் வகுப்புக்கான ஆண்டு பொதுத் தேர்வு 05.03.2025 புதன் கிழமை முதல் துவங்கி 27.03.2025 நடைபெற உள்ளது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் இராதாபுரம் நீ.வெ.செ அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (05.03.2025) நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு நேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு மையங்கள் 28 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 38 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 6 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் தேர்வு மையங்களாகவும் மற்றும் பாளையங்கோட்டை Central Jail சிறப்பு மையமாகவும் செயல்படுகின்றன. மேலும் 4 மையங்கள் தனித் தேர்வர்களுக்கான மையங்களாகவும் செயல்பட்டு வருகிறது.
11 வகுப்புக்கு 50 அரசு பள்ளிகளும், 58 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 11-ம் வகுப்புக்கு 80 தனியார் பள்ளிகளும் எழுத உள்ளனர். 11-ம் வகுப்பிற்கு 9307 மாணவர்களும், 10991 மாணவிகளும் மொத்தம் 20298 மாணவ மாணவிகளும் மற்றும் 308 தனித்தேர்வர்கள் எழுதுகின்றனர்.
11-ம் வகுப்பில் சொல்வதை எழுதுபவராக 254 தேர்வர்களும், தேர்வு எழுதுகின்றனர். தேர்வுப் பணிக்காக தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் 12, கூடுதல் துறை அலுவலர்கள் 12. வழித்தட அலுவலர்கள் 15 நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
7 பறக்கும் படை நிற்கும் படை என ஆசிரியர்கள் 2000-த்திற்கும் மேற்பட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் அலுவலக பணிக்கு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)
