» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு!
வியாழன் 6, மார்ச் 2025 8:04:26 PM (IST)
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாக்கியராஜ் (72) என்ற ஆயுள் தண்டனை உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், முனீர்பள்ளம் அருகே ஆரைக்குளத்தைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் பாக்கியராஜ். 1989 ஆம் ஆண்டு முனீர்பள்ளம் காவல் நிலையத்தில் 302 IPC பிரிவின் கீழ் தொடரப்பட்ட கொலை வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு, கடந்த 2023 டிசம்பர் 7ஆம் தேதி திருநெல்வேலி மத்திய சிறையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக முதுகு வலி, இடது தொடையில் வலி ஆகிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி 29 ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்குள்ள IMCU ORTHO WARD-ல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (மார்ச் 6) பிற்பகல் 1.50 மணியளவில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)

தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் 100 பவுன் நகை, ரூ.20 லட்சம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
திங்கள் 30, ஜூன் 2025 8:40:03 AM (IST)
