» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 5:21:32 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், இன்று (02.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அருகில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 50 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு மைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், பாளையங்கோட்டை குலவணிகர்புரம் இரயில்வே கேட் அருகில் ரூ.3.05 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தொடர்ந்து, மேலப்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.72.10 கோடி மதிப்பீட்டில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, தொற்றா நோய்கள் பிரிவு மற்றும் சிறுநீரக செயழிப்பு தொடர்பான இரத்த சுத்திகரிப்பு மைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், மானூர் ஊராட்சி ஒன்றியம் மதவக்குறிச்சி பகுதியில் ரூ12.58 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, வளர்ச்சித் திட்ட பணிகளை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வில், உதவி இயக்குநர் (வேலைவாய்ப்பு) மரிய சகாய அந்தோணி, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ரமாகோமதி உட்பட துறைசார்ந்த அலுவலர்கள், மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)

ஆசிரியர் வீட்டில் 25 பவுன் நகை பணம் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 4, ஜூலை 2025 8:11:08 AM (IST)
