» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் சான்றிதழ் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகத்தில் இன்று தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக Internship முடித்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், சான்றிதழ் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு Internship (பணி அனுபவ பயிற்சி) தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டது. இந்த பயிற்சியின் போது தொழில் முனைவோர்களுக்கு தேவையான அரசு திட்டங்களை பற்றி மற்றும் புத்தாக்கத்திற்காக வழங்கி வரும் திட்டங்களை பற்றி மாணவர்கள் தெரிந்து கொண்டு பயன்பெற்றனர்.
முதல் கட்டமாக, பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, முகமது இஸ்மாயில் ஐடிஐ கல்லூரியை சார்ந்த 7 மாணவ, மாணவியர்களுக்கு Internship பயிற்சி முடித்தற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி, பாராட்டினார்கள். இந்நிகழ்வில், மாவட்ட தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன திட்ட மேலாளர் மு.சிவ பாரதி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)




