» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரிக்கு கத்திக்குத்து: தந்தை கைது!
சனி 5, ஏப்ரல் 2025 8:24:32 AM (IST)
நெல்லை அருகே பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரியை கத்தியால் குத்திய மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
நெல்லையை அடுத்த கீழ முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்தவர் கணேசன் (55). இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாக உள்ளார். இவர் சம்பவத்தன்று பிளஸ்-1 படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை நேற்று முன்தினம் இரவில் கணேசனிடம் தட்டி கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த அவர் கத்தியால் கணேசனை குத்தினார். இதில் காயமடைந்த அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின்பேரில், முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தையை கைது செய்தனர்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பில் சேரன்மாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், பூசாரி கணேசன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)

ஆசிரியர் வீட்டில் 25 பவுன் நகை பணம் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 4, ஜூலை 2025 8:11:08 AM (IST)
