» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நாங்குநேரி அருகே 754 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு : காவல்துறை நடவடிக்கை
ஞாயிறு 18, மே 2025 10:44:15 AM (IST)
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தனியார் நிறுவனத்தில் 754 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 171 வழக்குகளில் மொத்தம் 754 கிலோ 333 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பொத்தையடி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் தீயிலிட்டு அழிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மூர்த்தி தலைமையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், சிவகங்கை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ், ராமநாதபுரம் மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் தடய அறிவியல் துறை சிவராஜ் ஆகியோர் முன்னிலையில், கஞ்சாவை தீயிலிட்டு அழித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)

தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் 100 பவுன் நகை, ரூ.20 லட்சம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
திங்கள் 30, ஜூன் 2025 8:40:03 AM (IST)
