» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கண்மாய், குளங்களிலிருந்து மண் எடுத்துச் செல்ல அனுமதி : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வெள்ளி 23, மே 2025 10:59:59 AM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் கண்மாய், குளங்களிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் மண் வெட்டி எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசாணை எண்.14, இயற்கை வளங்கள் துறை, நாள். 12.06.2024-ல்குறிப்பிட்டுள்ளவாறு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகளின் பராமரிப்பில் உள்ள கண்மாய் / குளங்களிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் மண் / வண்டல் மண் வெட்டி எடுப்பதற்காக தகுதி வாய்ந்த 677 குளங்கள் கண்டறியப்பட்டு திருநெல்வேலி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண். 03, நாள். 28.04.2025-ன் படி அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
விவசாய பயன்பாட்டிற்காக நஞ்சை நிலங்களை மேம்படுத்தும் வகைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 ஏக்கர் நிலத்திற்கு 75 கன மீட்டர் அளவும், புஞ்சை நிலத்திற்கு 90 கன மீட்டர் அளவும், மேலும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு 60 கன மீட்டர் அளவும் மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு 30 கன மீட்டர் அளவும் கட்டணமில்லாமல் வெட்டி எடுத்து பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனவே இச்சலுகையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தின் தரத்தினை மேம்படுத்தும் வகைக்கு தங்களது விவசாயம் நிலம் தொடர்பான 10(1) சிட்டா அடங்கல் மற்றும் புலப்பட நகல் ஆகியவற்றுடனும், மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் சான்றுகளுடனும், உரிய படிவத்தில் tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர்களுக்கு விண்ணப்பித்து மண் வெட்டி எடுத்துச் செல்ல அனுமதி பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)
