» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கோவில்பட்டி மைக்ரோகிரின் வளர்ப்பு ஆர்வலருக்கு பால பிரஜாபதி அடிகளார் பாராட்டு!
வியாழன் 10, ஜூலை 2025 3:05:12 PM (IST)

கோவில்பட்டியில் மைக்ரோகிரின் வளர்ப்பு ஆர்வலருக்கு சுவாமிதோப்பு பதியின் பட்டத்து தலைவர் பால பிரஜாபதி அடிகளார் பாராட்டு தெரிவித்தார்.
கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற வேளாண் அறிவியல் கல்வி ஆசிரியர் கோ. சுரேஷ்குமார் என்பவர் குறுகிய காலத்தில் விரைவான வளர்ச்சி தரும் நுண் கீரைகள் (மைக்ரோகிரின்) வீட்டில் வளர்க்கும் தகவல் குறித்து கட்டுரை மற்றும் நாளிதழ் செய்திகளை பார்வையிட்ட தமிழக அரசின் 2003-ம் ஆண்டின் மத நல்லிணக்கத்துகான "கோட்டை அமீர்" விருதாளர் கன்னியாகுமாரி மாவட்டம் சுவாமிதோப்பு பதியின் பட்டத்து தலைவர் அய்யா பால பிரஜாபதி அடிகளார் கோவில்பட்டிக்கு நேரில் வருகை தந்து மைக்ரோகிரின் வளர்ப்பு செயல்பாடு முறைகளை ஆய்வு செய்து பாராட்டி, குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் ஆசி வழங்கி பாராடினார்.
நாமே வீட்டிலேயே மிக எளிதாக வளர்த்து, தினசரி உணவில் இந்த நுண் கீரைகளை பச்சையாக சேர்த்தால் ஆரோக்கியமான உடல் நலம் பெறலாம் என்ற கருத்தை எல்லோரும் அறிய செய்ய தங்களின் ஆர்வமான செயல்பாடு இருக்க வேண்டும் என்று வாழ்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

G. SureshkumarJul 10, 2025 - 03:11:18 PM | Posted IP 104.2*****