» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருச்செந்தூர் கோயிலில் மகாராஷ்டிர ஆளுநர் தரிசனம்
சனி 12, ஜூலை 2025 7:36:43 AM (IST)

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த அவரை, கோட்டாட்சியர் சுகுமாறன், டிஎஸ்பி மகேஷ்குமார், கோயில் நிர்வாகத்தினர் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அவர் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், கோயில் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் ஆளுநர் கூறியதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு அதிக சிரத்தை எடுத்து குடமுழுக்கை நடத்தி இருக்கிறார்கள். கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் கூட கடவுளை வணங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.
அப்போது, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாவட்டத் தலைவர்கள் முத்துபலவேசம் (திருநெல்வேலி), தூத்துக்குடி தெற்கு சித்ராங்கதன், நவமணிகண்டன், திருச்செந்தூர் நகரத் தலைவர் செல்வகுமரன், நகரப் பொருளாளர் பலவேச கண்ணன், நிர்வாகிகள் வினோத் சுப்பையன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல்.ஐ.சி. ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 14, ஜூலை 2025 8:46:24 AM (IST)

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

முன்னாள் தூத்துக்குடிJul 12, 2025 - 01:20:24 PM | Posted IP 172.7*****