» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்

திங்கள் 14, ஜூலை 2025 8:34:24 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில், மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நாளை (ெசவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கி நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் ஆக.14-ந் தேதி வரை தொடர்ந்து நடத்தப்பட உள்ளது.

முகாமின் தொடக்கமான நாளை தூத்துக்குடி மாநகராட்சி, அழகேசபுரம் பகுதியில் உள்ள ஆனந்த மஹால் திருமண மண்டபத்தில் 21,22 மற்றும் 23-வது வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாம் நடைபெற உள்ளது. அதேநாளில் கோவில்பட்டி நகராட்சியில் சத்தியபாமா திருமண மண்டபத்திலும், ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் யாதவர் மண்டபத்திலும், ஆத்தூர் பேரூராட்சியில் ஆத்தூர் மேலத் தெருவில் உள்ள சண்முகசுந்தர நாடார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியிலும் நடக்கிறது.

தூத்துக்குடி ஒன்றியத்தில் மேலத்தட்டப்பாறை சமூகநலக் கூடத்திலும், கருங்குளம் ஒன்றியத்தில் சிங்கத்தாகுறிச்சியில் உள்ள வி.டி.கே. மஹால் திருமண மண்டபத்திலும் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் ஆக.14-ந் தேதி வரை 108 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாம்களில் குடிநீர் இணைப்பு, சொத்துவரி, வாரிசு மற்றும் சாதி சான்றிதழ், பட்டா குறித்த சேவைகள், ஆதார், மின் இணைப்பு உள்ளிட்ட அரசு சேவைகள் பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் இந்த முகாமில் பெறப்படும் மனுக்களின் மீது 45 நாட்களுக்குள் உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாம்களில் மட்டுமே வழங்கப்படும். எனவே மகளிர் உரிமைத்தொகை பெறதகுதியுள்ள பெண்கள் முகாம்களில் விண்ணப்பிக்கலாம், அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

makkalJul 14, 2025 - 09:05:12 AM | Posted IP 172.7*****

thaguthi ennavendru sollavillaiyae

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory