» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக விழா டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை: கல்லூரி மாணவர்களுக்கு எஸ்பி பாராட்டு!!
வியாழன் 17, ஜூலை 2025 8:35:16 PM (IST)

திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை நிறுவ உதவிய கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னெடுப்பில் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டது.
இந்த டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறையில் நிகழ்நேர வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்தை நேரடியாக கண்காணித்தல் (Real-time Traffic and Parking Monitoring), பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளை அறிந்து கொள்வதற்காக காவல்துறையினரின் May I Help You மையம், மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதி செய்யபட்ட இடங்கள், நடமாடும் கழிப்பறைகள், ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள் ஆகியவற்றை கண்டறிய "AIட்டையா Chatbot" என்னும் டிஜிட்டல் தொழில்நுட்பமும் நிறுவப்பட்டது.
மேற்படி 2 டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உருவாக்க உதவிய நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி, பண்ணாரி அம்மன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ஆகிய கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை இன்று (17.07.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நினைவுப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுவர், சிறுமிகள் குறித்து ஆபாசமான காட்சிகள்: பேட் கேர்ள் டீசரை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 19, ஜூலை 2025 12:15:39 PM (IST)

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: தனியார் பள்ளி பஸ்கள் தீவைத்து எரிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:48:22 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு
வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

PREMKUMARJul 18, 2025 - 09:15:37 AM | Posted IP 104.2*****