» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு

வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)



கூத்தன்குழி பாஸ்டர் லென்சன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி குபேர சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

நெல்லை மாவட்டம், கூத்தன்குழி பாஸ்டர் லென்சன் பாலிடெக்னிக் கல்லூரியில் ராதாபுரம் தாலுகா சட்டப் பணிக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாமில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி குபேர சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசுகையில், சட்டப்பணி ஆணைக்குழு மூலம் கல்லூரிகளில் ராகிங் செய்தால் சட்டத்தில் என்னென்ன வழிமுறைகள் உள்ளது என்பதை மிகவும் எளிமையாக எடுத்துரைத்தார். 

மேலும், சிறப்பு விருந்தினர் மற்றும் கல்லூரி அருட்தந்தை லூர்து ஜெயராஜ், அருட்தந்தை ஆல்பர்ட் ஜான்சன், முதல்வர் கண்ணன் ஆகியோர் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வழக்கறிஞர் இசக்கியப்பன், செயலாளர் கந்தசாமி, மற்றும் ஜெயாபிரின்சஸ், தனசேகர், செல்லத்துரை, ஆகிய வழக்கறிஞர்கள் சட்டப்பணி ஆணைக்குழுவின் பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். 

இந்நிகழ்ச்சியில் அருட்தந்தை டோமினிக், வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் ராஜேஷ் , வழக்கறிஞர்கள் ராயர், மனோராஜ், பொன்ராஜ், சங்கரி, சுந்தரம், கூடங்குளம் காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தாலுகா சட்டப்பணி ஆணைக்குழு நிர்வாக உதவியாளர் லெட்சுமி செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory