» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு கைது : நெல்லையில் பரபரப்பு
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 8:41:35 AM (IST)
நெல்லையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாநகர ஆயுதப்படையில் தலைமை காவலராக (ஏட்டு) பணியாற்றி வந்தவர் சசிகுமார் (45). 2002-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த இவர் தனது குடும்பத்துடன் பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாக குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை அருகே ஒரு பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அந்த பெண்ணின் 14 வயது மகளுக்கு சசிகுமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 9-ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி இந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் இதுகுறித்து போலீசாரிடம் தெரிவிக்கவில்லையாம். உடனே மாணவி, சக மாணவிகளின் உதவியுடன் ஒன் ஸ்டாப் சென்டர் குழந்தைகள் காப்பகம் எண்ணை தொடர்பு கொண்டு புகார் கொடுத்தார்.
உடனடியாக குழந்தைகள் நலத்துறை சார்பில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி, சசிகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் இரவில் கைது செய்தனர். சசிகுமாரின் சொந்த ஊர் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லையில் போக்சோ சட்டத்தில் போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழர்களின் தொன்மையை உலகறிய செய்யும் பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் பெருமிதம்!
ஞாயிறு 21, டிசம்பர் 2025 10:48:02 AM (IST)

திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை பணிகளின் தரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!!
சனி 20, டிசம்பர் 2025 9:20:36 PM (IST)

மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சனி 20, டிசம்பர் 2025 8:40:10 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

