» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 4:29:37 PM (IST)
நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06030) செப்டம்பர் 7-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் 13 முறை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இதேபோல், மறுமார்க்கத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு திங்கட்கிழமைதோறும் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் (06029) செப்டம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலும் கூடுதலாக 13 முறை இயக்கப்படுகிறது.
மேலும், திருச்சி - தாம்பரம் இடையே வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் (06190/ 06191) செப்டம்பர் 2-ம் தேதி வரை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்கள் இருமார்க்கத்திலும் கூடுதலாக 65 முறை இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் சுகுமார் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 5:31:58 PM (IST)

ஆட்சி மாற்றத்துக்காக பிரசாரம் செய்வேன்: நெல்லையில் சரத்குமார் பேட்டி
திங்கள் 22, டிசம்பர் 2025 4:42:33 PM (IST)

காடுவெட்டி மெயின் ரோட்டில் இளைஞர் உயிரிழந்த சம்பவம்: காவல் துறை தீவிர விசாரணை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:06:43 AM (IST)

