» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 4:29:37 PM (IST)
நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. 
 இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "நெல்லையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06030) செப்டம்பர் 7-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் 13 முறை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.
 இதேபோல், மறுமார்க்கத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு திங்கட்கிழமைதோறும் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் (06029) செப்டம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலும் கூடுதலாக 13 முறை இயக்கப்படுகிறது.
 மேலும், திருச்சி - தாம்பரம் இடையே வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் (06190/ 06191) செப்டம்பர் 2-ம் தேதி வரை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்கள் இருமார்க்கத்திலும் கூடுதலாக 65 முறை இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)




