» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தனியார் நிதி நிறுவனத்தில் போலி ரசீது தயாரித்து ரூ.13 லட்சம் மோசடி : ஊழியர் கைது
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 8:40:51 PM (IST)
நெல்லை டவுனில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி ரசீது தயாரித்து ரூ.13 லட்சம் மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லையை சேர்ந்தவர் செல்வ ஜெபஸ்தியான்(43). இவர் நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் கிளை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். அதே கிளையில் குழு தலைவராக சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூரை சேர்ந்த அருண்குமார் (30) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அருண்குமார் தினமும் தனக்கு கீழ் பணிபுரியும் களப் பணியாளர்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்து ஒப்படைக்கும் பணத்தை வாங்கி அதனை நிதி நிறுவனத்தின் வங்கி கணக்கில செலுத்தி அதற்கான ரசீதை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்.
ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடந்த மாதம் வரையிலும் வசூல் செய்த பணத்தை அருண்குமார் தனது நிறுவனத்தின் வங்கி கிளையில் செலுத்தாமலேயே போலியாக ரசீது ஏற்பாடு செய்து பணத்தை செலுத்தி விட்டதாக மோசடி செய்துவிட்டதாக கிளை மேலாளரான செல்வ ஜெபஸ்தியான் தனது ஆய்வில் கண்டுபிடித்தார்.
மேலும் இவ்வாறாக கடந்த 4 மாதங்களில் நிறுவனத்தின் பணம் ரூ.13 லட்சம் வரை அவர் மோசடி செய்தது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக செல்வ ஜெபஸ்தியான் சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோலப்பன் விசாரணை நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)




