» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தனியார் நிதி நிறுவனத்தில் போலி ரசீது தயாரித்து ரூ.13 லட்சம் மோசடி : ஊழியர் கைது
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 8:40:51 PM (IST)
நெல்லை டவுனில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி ரசீது தயாரித்து ரூ.13 லட்சம் மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லையை சேர்ந்தவர் செல்வ ஜெபஸ்தியான்(43). இவர் நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் கிளை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். அதே கிளையில் குழு தலைவராக சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூரை சேர்ந்த அருண்குமார் (30) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அருண்குமார் தினமும் தனக்கு கீழ் பணிபுரியும் களப் பணியாளர்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்து ஒப்படைக்கும் பணத்தை வாங்கி அதனை நிதி நிறுவனத்தின் வங்கி கணக்கில செலுத்தி அதற்கான ரசீதை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்.
ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடந்த மாதம் வரையிலும் வசூல் செய்த பணத்தை அருண்குமார் தனது நிறுவனத்தின் வங்கி கிளையில் செலுத்தாமலேயே போலியாக ரசீது ஏற்பாடு செய்து பணத்தை செலுத்தி விட்டதாக மோசடி செய்துவிட்டதாக கிளை மேலாளரான செல்வ ஜெபஸ்தியான் தனது ஆய்வில் கண்டுபிடித்தார்.
மேலும் இவ்வாறாக கடந்த 4 மாதங்களில் நிறுவனத்தின் பணம் ரூ.13 லட்சம் வரை அவர் மோசடி செய்தது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக செல்வ ஜெபஸ்தியான் சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோலப்பன் விசாரணை நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் சுகுமார் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 5:31:58 PM (IST)

