» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விபத்தில் படுகாயம் அடைந்த வேதனை: ரயில் முன் பாய்ந்து நெல்லை வாலிபர் தற்கொலை!
ஞாயிறு 24, ஆகஸ்ட் 2025 7:42:16 PM (IST)
நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்த வேதனையில் இருந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் நாங்குநேரி நெடுங்குளம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு வாலிபர் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். அவரது கை மற்றும் உடல் பாகங்கள் சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது.
இதுகுறித்து ரயில் என்ஜின் டிரைவர் நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்தவர் நாங்குநேரி அருகே உள்ள தெற்கு கரந்தாநேரியை சேர்ந்த தேவதாஸ் மகன் ஜெகித் (வயது 23) என்பது தெரியவந்தது.
இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். விடுமுறை கோவையில் இருந்து நாங்குநேரிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்துள்ளார். அப்போது வழியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன்பின்பு வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.
இந்த விபத்துக்கு பிறகு அவர் அடிக்கடி தனக்கு தலை வலிப்பதாகவும், தற்கொலை செய்யப்போவதாகவும் கூறி வந்துள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியேறி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் படுகாயம் அடைந்ததால் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)

