» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வாலிபரை வெட்டிக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம்தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:18:18 AM (IST)
ராதாபுரம் அருகே வாலிபரை வெட்டிக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
 நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூத்தன்குழி சுனாமி காலனியை சேர்ந்தவர் சிலுவை கித்தேரியான். இவரது மனைவி அந்தோணி வளன்அரசி. இந்த தம்பதியின் மகன் சிலுவை அன்றோ அபினேஷ் (20). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த திருவிழாவில் கலந்துகொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
 அப்போது கூத்தன்குழி மேற்கு தெருவை சேர்ந்த சாந்தகுரு மகன் சந்துரு (23), பாத்திமாநகரை சேர்ந்த ஜான்சன் மகன் ரேவந்த் (27), ஜெய ஆரோக்கியசெல்வம் மகன் பிரதீஷ் (23), சந்தியா மகன் நிக்கோலஸ் (23), அந்தோணிராஜ் மகன் டென்னிஸ் (29) ஆகியோர் சிலுவை அன்றோ அபினேசை வழிமறித்து தகராறு செய்தனர்.
 அதன்பின்னர் சில நாட்களுக்கு பிறகு அவர்கள் மீண்டும் சிலுவை அன்றோ அபினேஷ் வீட்டுக்கு சென்று அவரை தாக்கியுள்ளனர். இதனால் அவரது தாய் அந்தோணி வளன்அரசி கூடங்குளம் போலீசில் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த சந்துரு, ரேவந்த், பிரதீஷ், நிக்கோலஸ், டென்னிஸ் மற்றும் சிறுவன் உள்பட 8 பேர் கடந்த 28.8.2021 அன்று சிலுவை அன்றோ அபினேசை ஓட ஓட விரட்டிச்சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
 இதுகுறித்து சிறுவன் உள்பட 8 பேர் மீது கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதி கதிரவன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் குற்றம் சாட்டப்பட்ட சந்துரு, ரேவந்த், பிரதீஷ், நிக்கோலஸ், டென்னிஸ் ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
 அவர்களுடன் குற்றம் சாட்டப்பட்ட 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு நபர் சிறுவன் என்பதால் அவருக்கான வழக்கு விசாரணை தனியாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் காளிமுத்து ஆஜரானார்.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)




