» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சின்னகண்ணுபுரம் பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 12:05:36 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி சின்னகண்ணுபுரம் பகுதியில் பிரதான சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டு சின்னகண்ணுபுரம் மெயின் ரோட்டில் சில நாள்களுக்கு முன்பு மழைநீர் செல்வதற்கு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. அப்பணியின் போது இருந்த 15 அடி ரோடு 7 அடியாக மாறியது. இதனால் அந்த சாலையில் செல்லும் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள்,பொதுமக்கள்,வியாபாரிகள் என பலருக்கு விபத்துக்கள் நேரிடுகிறது.
2023ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் இந்த சாலை அதிகளவில் பாதிக்கப்பட்ட பொழுது இதனை சரி செய்யவில்லை. மேலும் தற்பொழுது இச்சாலை முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது ஆகையால் இதில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை : கந்துவட்டி கொடுமையால் பரிதாபம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:32:19 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம்: சபாநாயகர் அப்பாவு ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 5:03:58 PM (IST)

வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள்
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 10:47:21 AM (IST)

வாலிபரை வெட்டிக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம்தீர்ப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:18:18 AM (IST)

டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் தான் இருக்கிறார்: நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
திங்கள் 1, செப்டம்பர் 2025 5:14:05 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:22:37 PM (IST)

MAKKALSep 2, 2025 - 02:52:34 PM | Posted IP 172.7*****