» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை : கந்துவட்டி கொடுமையால் பரிதாபம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:32:19 PM (IST)
கடையநல்லூர் அருகே கந்துவட்டி கொடுமையால் 100 அடி உயர மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி பகுதியை சார்ந்தவர் முருகன் மனைவி லெட்சுமி. இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். முருகன் அதே பகுதியைச் சார்ந்த மாரியம்மாள் என்பவரிடம் ஆறு லட்ச ரூபாய் கடன் வாங்கி உள்ளார். தற்போது வட்டியும் அசலும் சேர்த்து 9 லட்சம் ரூபாய் தர வேண்டும் அல்லது வீட்டை எழுதி தர வேண்டும் என்று கேட்டுள்ளார்
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது மாரியம்மாள் முருகன் லட்சுமி இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த லெட்சுமி சொக்கம்பட்டி பகுதியில் உள்ள மலையில் 100 அடி உயரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)

