» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரிவாள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நெருக்கடி : சீமான் குற்றச்சாட்டு

வியாழன் 4, செப்டம்பர் 2025 8:52:29 AM (IST)



அரிவாள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நெருக்கடி கொடுப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார். 

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாவா நகரம், கட்டளைக்குடியிருப்பு, வடகரை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் அரிவாள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழிலில் ஈடுபடும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திக்கும் நிகழ்ச்சி நெல்லையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சீமான் கலந்துகொண்டு பேசியதாவது: இரும்பு கருவிகள் உற்பத்தி செய்வதில் குறிப்பாக அரிவாள், பன்னரிவாள், மண்வெட்டி போன்ற விவசாயக் கருவிகள், வீட்டு உபயோக பொருட்கள், கோவில் குலதெய்வ வழிபாடு என்று மக்களின் புழக்கத்தில் உள்ள இரும்பு கருவிகளை உற்பத்தி செய்து வருகிறீர்கள்.

நீண்ட நெடுங்காலமாக தொன்று தொட்டு பட்டறை வைத்து தொழில் செய்யும் இரும்பு தொழிலாளர்கள் இரும்பு கருவிகள் செய்தவதிலேயே முழுமையாக கவனம் செலுத்தி வருகின்றனர். இரும்பின் காலம் 5300 ஆண்டுகள் என்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூலமாக ஆய்வுகள் நிரூபித்து, இரும்பின் தொன்மை என்ற ஆய்வு நூலை வெளியிடப்பட்டது.

தமிழர்கள் தான் இரும்பு ஆயுதங்களை உற்பத்தி செய்து கொடுத்தார்கள் என்று பெருமை பீற்றிக்கொள்ளும் திராவிட மாடல் அரசு, இரும்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொள்ளவில்லை. அரிவாள் தயாரிக்கும் தொழிலுக்கு காவல்துறை மூலமாக தமிழக அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.

தென் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிகழும் சாதிய, ஆணவ, தீண்டாமை படுகொலைகளை தடுக்க தவறிய போலீஸ் துறையானது, இரும்புத் தொழிலாளர்களை ஒடுக்குவதை கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா, தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த மண்டலச் செயலாளர் அருண்சங்கர், கடையநல்லூர் மண்டலச் செயலாளர் கணேசன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேல் மற்றும் அரிவாள் தயாரிக்கும் தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory