» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி எஸ்எம்எஸ்: அங்கன்வாடி பணியாளர் அதிர்ச்சி!!
வியாழன் 4, செப்டம்பர் 2025 5:25:46 PM (IST)
நெல்லையில் ரூ.1.61 கோடி மின் கட்டணம் செலுத்தும் படி குறுந்தகவல் வந்ததால் அங்கன்வாடி பணியாளர் கடும் அதிர்ச்சியடைந்தார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மருதகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மனைவி சேபா (43) இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மாரியப்பன் உடல்நலக்குறைவால் சமீபத்தில் உயிரிழந்த நிலையில் சேபா தனது மூன்று குழந்தைகளோடு தந்தை ஆசிர்வாதத்தின் அரவணைப்பில் மருதகுளத்தில் வசித்து வருகிறார் மேலும் சேபா அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வரும் நிலையில் செப்டம்பர் மாதத்துக்கான மின் கட்டணத்தை அளவீடு செய்ய நேற்று மின் ஊழியர்கள் வந்துள்ளார்.
கட்டணம் அளவீடு எடுத்து விட்டுச் சென்ற நிமிடங்களில் சேபாவின் செல்போனிற்கு வந்த குறுந்தகவலில் மின் கட்டணம் ஒரு கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 என வந்ததைக் கண்டு சேபா கடும் அதிர்ச்சி அடைந்தார் வழக்கமாக அதிகபட்சம் 500 ரூபாய் மட்டுமே கட்டணம் வரும் நிலையில் திடீரென கோடிக்கணக்கில் மின் கட்டணம் வந்ததைக் கண்டு மிரண்டு போன சேபா மூலைக்கரைப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் இதுதொடர்பாக முறையிட்டார்.
அதன் பெயரில் இன்று மின் ஊழியர்கள் சேபா வீட்டுக்கு சென்று மின்மீட்டரை பரிசோதனை செய்தபோது அளவீடு செய்ததில் குளறுபடி நடந்தது தெரியவந்தது இதையடுத்து மீண்டும் கணக்கெடுப்பு நடத்தி குளறுபடியை சரி செய்தனர் அதன்படி சேபாவுக்கு வெறும் 494 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் வந்தது.
இந்த குளறுபடி குறித்து நாங்குநேரி உதவி செயற்பொறியாளர் ஆஷாவிடம் கேட்டபோது, மின் கட்டணம் அளவீடு செய்த போது நடந்த தவறால் இந்த பிரச்சனை வந்துள்ளது. அதாவது சேபா வீட்டில் எங்கள் ஊழியர் ரீடிங் எடுக்கும்போது சரியான மின் அளவு 14109 KWH என காட்டி உள்ளது ஆனால் அவர் அதை கணினியில் பதிவேற்றம் செய்யும்போது தவறுதலாக 1410907 KWH என பதிவேற்றம் செய்துவிட்டார்.
ஒரு டிஜிட் எண் கூடுதலாக சேர்க்கப்பட்டதால் லட்சக்கணக்கிலான யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாக மின் கட்டணம் வந்துள்ளது. இது குறித்த தகவல் கிடைத்தவுடன் மூலைக்கரைப்பட்டி உதவி பொறியாளர் மூலம் செயற்பொறியாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டு பிரச்சனை உடனடியாக சரி செய்யப்பட்டது என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)

