» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பெயிண்ட் அடிக்க சென்ற வீட்டில் 6½ பவுன் நகை திருடியவர் கைது!
சனி 6, செப்டம்பர் 2025 10:32:37 AM (IST)
நெல்லை உடையார்பட்டியில் பெயிண்ட் அடிக்க சென்ற வீட்டில்  6½ பவுன் தங்க சங்கிலியை திருடியவரை போலீசார் கைது செய்தனர். 
 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (50). இவர்களின் சொந்த ஊர், நெல்லை சந்திப்பு உடையார்பட்டி. இங்கு இவர்களுக்கு சொந்தமான 100 ஆண்டுகள் பழமையான வீடு உள்ளது. இந்த வீட்டை சீரமைக்க முடிவு செய்த தம்பதியினர் அதற்கான ஆட்களை நியமித்து வீட்டு வேலை நடந்து வருகிறது.
 இந்த வீட்டுக்கு வர்ணம் பூசும் பணியில் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் நடராஜன் (56) உள்ளிட்ட சிலர் ஈடுபட்டு வந்தனர். இந்த பணிகளை தம்பதியர் பார்வையிட்டு வந்தனர். நேற்று முன்தினம் மதியம் கிருஷ்ணவேணி தனது கைப்பையில் தங்க நகைகளை வைத்து இருந்தார். இதனை நோட்டமிட்ட நடராஜன் நைசாக அந்த பையில் இருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை திருடி உள்ளார்.
 சிறிது நேரம் கழித்து கிருஷ்ணவேணி தனது கைப்பையை பார்த்த போது நகை மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சந்திப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம் மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் நடராஜனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகையை மீட்டனர்.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)




