» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கல்லிடைக்குறிச்சியில் அரபி மதரஸா ஆண்டு விழா
சனி 6, செப்டம்பர் 2025 4:47:49 PM (IST)

கல்லிடைக்குறிச்சியில் நூருல்ஹிதாயா அரபி மதரஸாவின் 36ஆவது ஆண்டு விழா உட்பட முப்பெரும் விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் நபிகள் (ஸல்) நாயகம் பிறந்ததின விழா, நூருல்ஹிதாயா அரபி மதரஸாவின் 36ஆவது ஆண்டு விழா, ரஹ்மத்துல்லாஹ் அப்பா கந்தூரி விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு, ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அ. நாகூர்கனி தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் அ. நாகூர்மீரான், தணிக்கையாளர் முகம்மது உசேன், பொருளாளர் என். அஜிஸ், நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முகைதீன் பள்ளிவாசல் இமாம் பி. முஹம்மது இத்ரீஸ் கிராஅத் ஓதினார். சிறப்பு விருந்தினர்களாக களக்காடு மருத்துவர் பி. ஆதம்ஷேக்அலி, வழக்குரைஞர் எம். பாதுஷா ஆகியோர் கலந்துகொண்டு மதரஸா மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மதரஸா மாணவர், மாணவிகளின் சொற்பொழிவு, குறுநாடகம், உரையாடல் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக மதரஸா மாணவர், மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் வடக்குத் தைக்கால் தெருவில் மதரஸாவில் இருந்து புறப்பட்டு விழா நடைபெறும் தெற்கு தைக்கால் தெருவில் முடிவடைந்தது. இதில், ஜமாத் தலைவர், நிர்வாகிகள், ஜமாத்தார்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், தொடர்ந்து மதரஸா மாணவர்கள் பங்கேற்ற உயர்ந்த வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது கல்வியா, செல்வமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
நடுவராக நூருல்ஹிதாயா அரபி மதரஸா முதல்வர் மு. ரஹ்மத் ரபீக் இருந்தார். கல்வியே என்ற தலைப்பில் மாணவிகள் ரெஸ்பின் பாத்திமா, நபிலா, செல்வமே என்ற தலைப்பில் மாணவர்கள் அஸ்லம் அஹமத், அஷ்வாக் அஹ்மத் ஆகியோர் பேசினர். ரஹ்மத் பள்ளிவாசல் தலைமை இமாம் எஸ். முகம்மது முஹம்மில் வரவேற்றார். நிகழ்ச்சியை துணை இமாம் அ. தாஜூதீன் தொகுத்து வழங்கினார். ஜமாத் செயலர் அ. ஷேக் செய்யது அலி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் ரூ.71 கோடியில் புதிய விண்கல கட்டுப்பாட்டு மையம்: இஸ்ரோ திட்டம்
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 9:35:47 AM (IST)

ரயில் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை : நெல்லையில் பயங்கரம்!!
சனி 6, செப்டம்பர் 2025 10:50:31 AM (IST)

பெயிண்ட் அடிக்க சென்ற வீட்டில் 6½ பவுன் நகை திருடியவர் கைது!
சனி 6, செப்டம்பர் 2025 10:32:37 AM (IST)

போக்சோ வழக்கில் கைதான தூத்துக்குடி வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:27:07 PM (IST)

நீட் தோ்வைவிட கொடூரமானது ஆசிரியா் தகுதித் தோ்வு : பேரவைத் தலைவா் மு.அப்பாவு
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:32:38 PM (IST)

திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து சபாநாயகர் மரியாதை!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:43:11 AM (IST)
