» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 8, செப்டம்பர் 2025 5:19:09 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விண்ணப்பித்த மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (08.09.2025) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
இக்கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், ஒவ்வொரு வாரமும் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கோரிக்கை மனுக்கள் அளிக்க வரும் பயனாளிகளுக்கு மனுக்கள் பரிசீலனை செய்து, உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி மனுக்களுக்கு கேட்கும் உபகரணங்கள் தயார் நிலையில் இருக்கும் உபகரணங்களை பொறுத்து திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மடக்கு சக்கர நாற்காலி கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.13,500/- மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலி இரண்டு பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்.
இந்நிகழ்வில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா, தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையர் மகாலெட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜா.ராஜசெல்வி, மாவட்ட வழங்கல் அலுவலர் பாக்கியலெட்சுமி உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)

