» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி சாராள் டக்கர் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 12:19:16 PM (IST)

திருநெல்வேலியில் 3 மாத சம்பள பாக்கியை தரக்கோரி சாராள் டக்கர் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி நுழைவாயிலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் "திருநெல்வேலியில் சாராள் டக்கர் கல்லூரி, சி.எஸ்.ஐ. டயோசிசனின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு தன்னாட்சி மகளிர் கல்லூரி ஆகும். இங்கு சுமார் 3600 மாணவிகள் பயின்று வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட மேனேஜ்மென்ட் விரிவுரையாளர்களும் 70க்கும் மேற்பட்ட ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கல்லூரியில் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த மூன்று மாத காலமாக ஊதியம் இல்லாமல் துயரப்பட்டு வருகிறோம். ஊதியம் கேட்டு பொறுப்பு முதல்வரிடம் பலமுறை முறையிட்டும் எந்த பயனும் அளிக்கவில்லை. தற்போது எங்கள் மீது கருணை கூர்ந்து நெல்லை திருமண்டல பேராயர் (சேர்மன்) மற்றும் பொறுப்பு முதல்வர் ஒரு மாத சம்பளத்தை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் யாரும் வங்கி கணக்கினை பயன்படுத்த முடியாதவாறு முடக்கிவிட்டனர்.
இதைக்குறித்து வங்கி மேலாளரிடம் முறையிட்டபோது அவர் கூறியதாவது, தங்கள் வங்கி கணக்கினை நிர்வகிக்கும் அதிகாரம் - முதல்வர் மற்றும் செயலாளர் இணைந்து கையொப்பமிட்டு செயல்படக் கூடியதாகும், ஆனால் தற்போது கல்லூரிக்கு செயலாளர் இல்லை என்றும் மற்றொரு தரப்பினர் வங்கி மேலாளரிடம் எப்படி ஊதியம் அளிக்கலாம் எனக் கேட்டு வங்கி கணக்கினை முடக்கி வைத்ததாகவும் மேலாளர் மூலமாக தெரிந்து கொண்டோம்.
யார் வங்கி கணக்கினை முடக்கினார்கள் என்றும் எதற்காக செய்யப்பட்டது என்றும் நாங்கள் அறிந்து கொள்ள விழைகிறோம். மேலும் கல்லூரிக்கு செயலாளர் நியமனம் செய்து மாதந்தோறும் முறையாக ஊதியம் அளிக்க வேண்டடி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருவதாகவும், தவறும் பட்சத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)

