» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி சாராள் டக்கர் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 12:19:16 PM (IST)

திருநெல்வேலியில் 3 மாத சம்பள பாக்கியை தரக்கோரி சாராள் டக்கர் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி நுழைவாயிலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
 இதுகுறித்து அவர்கள் கூறுகையில் "திருநெல்வேலியில் சாராள் டக்கர் கல்லூரி, சி.எஸ்.ஐ. டயோசிசனின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு தன்னாட்சி மகளிர் கல்லூரி ஆகும். இங்கு சுமார் 3600 மாணவிகள் பயின்று வருகின்றனர். 100க்கும் மேற்பட்ட மேனேஜ்மென்ட் விரிவுரையாளர்களும் 70க்கும் மேற்பட்ட ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கல்லூரியில் பணிபுரிந்து வருகின்றனர். 
 கடந்த மூன்று மாத காலமாக ஊதியம் இல்லாமல் துயரப்பட்டு வருகிறோம். ஊதியம் கேட்டு பொறுப்பு முதல்வரிடம் பலமுறை முறையிட்டும் எந்த பயனும் அளிக்கவில்லை. தற்போது எங்கள் மீது கருணை கூர்ந்து நெல்லை திருமண்டல பேராயர் (சேர்மன்) மற்றும் பொறுப்பு முதல்வர் ஒரு மாத சம்பளத்தை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் யாரும் வங்கி கணக்கினை பயன்படுத்த முடியாதவாறு முடக்கிவிட்டனர். 
 இதைக்குறித்து வங்கி மேலாளரிடம் முறையிட்டபோது அவர் கூறியதாவது, தங்கள் வங்கி கணக்கினை நிர்வகிக்கும் அதிகாரம் - முதல்வர் மற்றும் செயலாளர் இணைந்து கையொப்பமிட்டு செயல்படக் கூடியதாகும், ஆனால் தற்போது கல்லூரிக்கு செயலாளர் இல்லை என்றும் மற்றொரு தரப்பினர் வங்கி மேலாளரிடம் எப்படி ஊதியம் அளிக்கலாம் எனக் கேட்டு வங்கி கணக்கினை முடக்கி வைத்ததாகவும் மேலாளர் மூலமாக தெரிந்து கொண்டோம்.
 யார் வங்கி கணக்கினை முடக்கினார்கள் என்றும் எதற்காக செய்யப்பட்டது என்றும் நாங்கள் அறிந்து கொள்ள விழைகிறோம். மேலும் கல்லூரிக்கு செயலாளர் நியமனம் செய்து மாதந்தோறும் முறையாக ஊதியம் அளிக்க வேண்டடி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருவதாகவும், தவறும் பட்சத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். 
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)




