» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாணவியின் தாயாருக்கு மிரட்டல்: வன்கொடுமை சட்டத்தில் கராத்தே பயிற்சியாளர் கைது!!
புதன் 10, செப்டம்பர் 2025 8:15:01 AM (IST)
நெல்லை அருகே பயிற்சி வகுப்புக்கு வந்த மாணவியின் தாயாரை மிரட்டிய கராத்தே பயிற்சியாளரை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
 நெல்லை மாவட்டம் பேட்டையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள நரசிங்கநல்லூர் பொன்விழா நகரை சேர்ந்தவர் அப்துல் வகாப் (32). கராத்தே பிரிவில் டிப்ளமோ படித்துள்ள இவர், சுத்தமல்லி, பேட்டை கோடீஸ்வரன் நகர் பகுதியில் கராத்தே பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். இதேபோல் பாளை கே.டி.சி. நகர் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்பும் நடத்தி வருகிறார். கராத்தே வகுப்புகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
 அதில் சுத்தமல்லி பகுதியில் உள்ள டீக்கடை ஊழியர் ஒருவரின் 13 வயது மகளும் படித்து வருகிறார். இந்த சிறுமியை தினமும் காலையில் அவரது தாயார் பயிற்சி மையத்திற்கு கொண்டு சென்று விடுவது வழக்கம். அப்போது சிறுமியின் தாயாரிடம் அப்துல் வகாப் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளார். ஆனால் தவறான நோக்கத்தில் பழகிய அப்துல் வகாப், சிறுமியின் தாயிடம் ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார்.
 இதுகுறித்து பெண்ணின் கணவருக்கு தெரியவந்ததால் கண்டித்துள்ளார். எனவே அந்த பெண் அப்துல் வகாப்பிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அப்துல் வகாப் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த பெண்ணிடம், நான் போன் செய்தபோது ஏன் எடுக்கவில்லை என்று கூறி தாக்கியதோடு, தன்னுடன் வந்து தனிமையில் இருக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
 இதுகுறித்து அந்த பெண் சுத்தமல்லி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆத்திரமூட்டும் வகையில் கடுமையான சொற்களால் திட்டுதல், கொலை மிரட்டல், அசிங்கமாக பேசுதல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அப்துல் வகாபை நேற்று அதிகாலையில் கைது செய்தனர்.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)




