» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)
நெல்லை அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் எதிரொலியாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 13 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் இரு தரப்பினராக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பள்ளிக்குச் சென்ற போலீசார் மேற்கொண்டு பிரச்சனைகள் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோஷ்டி முதலில் ஈடுபட்டதாக கூறப்படும் இரு தரப்பை சேர்ந்த 13 மாணவர்களை கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும் இன்று மாணவர்களுக்கு பரிச்சை என்பதால் அறிவுரை வழங்கி அதிகாரிகள் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)




