» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் 47 மையங்களில் குரூப் 2 தேர்வு: ஆட்சியர் தகவல்

புதன் 24, செப்டம்பர் 2025 4:48:00 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 28ஆம் தேதி 47 தேர்வு மையங்களில் நடைபெற உள்ள குரூப் 2 தேர்வினை 13621 தேர்வர்கள் எழுத உள்ளனர். 

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II, தொகுதி II மற்றும் தொகுதி II A பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு (OMR) 28.09.2025 முற்பகல் பாளையங்கோட்டை, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய வட்டங்களில் உள்ள 47 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. மேற்படி தேர்வினை 13621 தேர்வர்கள் எழுத உள்ளனர்.

மேற்படி தேர்வானது 28.09.2025 அன்று காலை 09.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணியளவில் முடிவடையும். மேற்படி தேர்விற்கு கலந்து கொள்ளும் தேர்வர்கள் காலை 08.30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும். 

தேர்விற்கு காலை 09.00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் தேர்வுக்கூட அனுமதி சீட்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை படித்து தேர்வர்கள் கடைபிடிக்குமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory