» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் 47 மையங்களில் குரூப் 2 தேர்வு: ஆட்சியர் தகவல்
புதன் 24, செப்டம்பர் 2025 4:48:00 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 28ஆம் தேதி 47 தேர்வு மையங்களில் நடைபெற உள்ள குரூப் 2 தேர்வினை 13621 தேர்வர்கள் எழுத உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II, தொகுதி II மற்றும் தொகுதி II A பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு (OMR) 28.09.2025 முற்பகல் பாளையங்கோட்டை, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய வட்டங்களில் உள்ள 47 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. மேற்படி தேர்வினை 13621 தேர்வர்கள் எழுத உள்ளனர்.
மேற்படி தேர்வானது 28.09.2025 அன்று காலை 09.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணியளவில் முடிவடையும். மேற்படி தேர்விற்கு கலந்து கொள்ளும் தேர்வர்கள் காலை 08.30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும்.
தேர்விற்கு காலை 09.00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் தேர்வுக்கூட அனுமதி சீட்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை படித்து தேர்வர்கள் கடைபிடிக்குமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் கனமழை : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:45:56 PM (IST)

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)

நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ருசிகரம் : தந்தையும் மகனும் தேர்வெழுதினர்!!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:13:11 AM (IST)

மாநில வில் வித்தை போட்டி: வீரவநல்லூர் மாணவனுக்கு தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:09:21 AM (IST)

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)




