» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருப்புடைமருதூர் நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்!
சனி 24, ஜனவரி 2026 10:35:09 AM (IST)

திருப்புடைமருதூரில் அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூசப் பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், திருப்புடைமருதூரில் உள்ள அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூசப் பெருந்திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள பழமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தாமிரவருணி நதியில் நீராடி தரிசனம் செய்வதுண்டு.
நிகழாண்டு இத்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோயிலில் வியாழக்கிழமை கணபதி ஹோமம், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலையில் கொடியேற்று வைபவத்தை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், கோயில் செயல் அலுவலர் கு. பாரதி, கட்டளைதாரர் தளபதி ராம்குமார், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மாலையில் அப்பர் வீதி உலா, இரவில் சுவாமி அம்பாள் புறப்பாடு, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது. திருவிழா நாள்களில் தினமும் காலை, இரவில் சுவாமி அம்பாள் வீதியுலா, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெறும். திருவிழாவில் 9ஆம் நாளான ஜன.31ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 8.45 மணியளவில் தேரோட்டம், இரவு 7 மணிக்கு மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி, தொடர்ந்து புஷ்ப பல்லக்கில் சுவாமி அம்பாள் வீதியுலா ஆகியவை நடைபெறுகிறது.
பிப்.1ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசத்தை முன்னிட்டு பிற்பகல் 1.30 மணிக்கு தாமிரவருணி ஆற்றில் தீர்த்தவாரி, இதையடுத்து கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மாலையில் அபிஷேக ஆராதனை, இரவு 11 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறும். பிப்.2ஆம் தேதி திங்கள்கிழமை காலையில் சுவாமி அம்பாள் வீதியுலா, மதியம் சாஸ்தா ப்ரீதி, மாலையில் சண்டிகேஸ்வரர் சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா, பைரவர் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வீரவநல்லூர், முக்கூடல் மற்றும் திருநெல்வேலியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், திருப்புடைமருதூரில் உள்ள அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூசப் பெருந்திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள பழமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தாமிரவருணி நதியில் நீராடி தரிசனம் செய்வதுண்டு.
நிகழாண்டு இத்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோயிலில் வியாழக்கிழமை கணபதி ஹோமம், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலையில் கொடியேற்று வைபவத்தை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், கோயில் செயல் அலுவலர் கு. பாரதி, கட்டளைதாரர் தளபதி ராம்குமார், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மாலையில் அப்பர் வீதி உலா, இரவில் சுவாமி அம்பாள் புறப்பாடு, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது. திருவிழா நாள்களில் தினமும் காலை, இரவில் சுவாமி அம்பாள் வீதியுலா, ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெறும். திருவிழாவில் 9ஆம் நாளான ஜன.31ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 8.45 மணியளவில் தேரோட்டம், இரவு 7 மணிக்கு மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி, தொடர்ந்து புஷ்ப பல்லக்கில் சுவாமி அம்பாள் வீதியுலா ஆகியவை நடைபெறுகிறது.
பிப்.1ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசத்தை முன்னிட்டு பிற்பகல் 1.30 மணிக்கு தாமிரவருணி ஆற்றில் தீர்த்தவாரி, இதையடுத்து கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மாலையில் அபிஷேக ஆராதனை, இரவு 11 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறும். பிப்.2ஆம் தேதி திங்கள்கிழமை காலையில் சுவாமி அம்பாள் வீதியுலா, மதியம் சாஸ்தா ப்ரீதி, மாலையில் சண்டிகேஸ்வரர் சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா, பைரவர் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வீரவநல்லூர், முக்கூடல் மற்றும் திருநெல்வேலியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தச்சநல்லூரில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:30:07 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 77.37% வாக்குப்பதிவு: வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:12:45 PM (IST)

சென்னை - நெல்லை இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:36:55 PM (IST)

இரட்டைக்கொலை விவகாரத்தில் புறக்கணிப்பு : வாக்களித்த இளம்பெண்ணால் பரபரப்பு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:34:18 PM (IST)

காலை 11 மணி நிலவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் 32.95% வாக்குப்பதிவு – அம்பை முதலிடம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:36:38 PM (IST)

கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் உட்பட 12 மாற்று ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்!
புதன் 22, ஏப்ரல் 2026 12:38:00 PM (IST)

