» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குமரி, நெல்லையிலிருந்து கட்ரா செல்லும் ரயில்களில் கூடுதல் ஏ.சி. பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:13:13 PM (IST)

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியிலிருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கட்ராவுக்கு இயக்கப்படும் நீண்டதூர எக்ஸ்பிரஸ் ரயில்களில், பயணிகளின் வசதிக்காகவும் கூடுதல் இடவசதிக்காகவும் கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாகத் தெற்கு ரயில்வே தலைமையகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (கன்னியாகுமரி - கட்ரா):
கன்னியாகுமரி மற்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கட்ரா இடையே இயக்கப்படும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்கள்: 16317 / 16318) கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த கூடுதல் பெட்டி இணைப்பானது, கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் ரயிலில் வரும் ஜூன் 19-ஆம் தேதி முதலும், மறுமார்க்கத்தில் கட்ராவிலிருந்து புறப்படும் ரயிலில் ஜூன் 22-ஆம் தேதி முதலும் அமலுக்கு வருகிறது.
நவ்யுக் எக்ஸ்பிரஸ் (திருநெல்வேலி - கட்ரா):
இதேபோல், திருநெல்வேலி மற்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி கட்ரா இடையே இயக்கப்படும் நவ்யுக் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் (வண்டி எண்கள்: 16787 / 16788) கூடுதலாக ஒரு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது. இம்மாற்றத்தின்படி, திருநெல்வேலியிலிருந்து புறப்படும் ரயிலில் நேற்று (ஜூன் 15) முதலே இந்தக் கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் கட்ராவிலிருந்து புறப்படும் ரயிலில் வரும் ஜூன் 18-ஆம் தேதி முதல் இந்த கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படும்.
தெற்கு ரயில்வேயின் இந்த நடவடிக்கை காரணமாக, கோடைக்காலப் பயணத்தை முடித்துத் திரும்பும் பயணிகள் மற்றும் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் தென் மாவட்டப் பயணிகள் தங்களின் பயணச்சீட்டுகளை எவ்வித சிரமமுமின்றி எளிதாகப் பெற்றுப் பயனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தவெக ஆட்சியிலும் தொடர் கதையாகும் கனிம வளக் கடத்தல்? பொதுமக்கள் புகார்!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:20:20 PM (IST)

பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி!
செவ்வாய் 16, ஜூன் 2026 10:48:00 AM (IST)

பாளையங்கோட்டை மத்திய சிறையில் வேலைவாய்ப்பு : கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் அறிவிப்பு
திங்கள் 15, ஜூன் 2026 5:43:43 PM (IST)

நெல்லையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பயிற்சி தொடக்கம்: சேகரிக்கப்படும் விபரங்கள்..!
திங்கள் 15, ஜூன் 2026 4:57:01 PM (IST)

பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.2.98 லட்சம் மதிப்பில் நவீன வாசிப்புக் கருவிகள் - ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, ஜூன் 2026 4:05:43 PM (IST)

குற்றாலம் மெயின் அருவியில் குளித்த பெண் மூச்சுத்திணறி உயிரிழப்பு!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:45:00 AM (IST)


