» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது!

வியாழன் 30, ஜூலை 2026 12:30:12 PM (IST)

தென்காசி அருகே நர்சிங் கல்லூரி மாணவிக்குத் தொடர் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தலைமறைவாக இருந்த தனியார் மருத்துவக் கல்லூரித் தாளாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தென்காசி பகுதியிலுள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்குக் கல்லூரியின் தாளாளர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார். இப்புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட தென்காசி காவல்துறையினர், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 சட்டப் பிரிவுகளின் கீழ் கல்லூரித் தாளாளர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கல்லூரித் தாளாளரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரைத் தென்காசி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். கைது நடவடிக்கைக்குப் பிறகு, தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக அவர் கூறியதையடுத்து, அவரை உடனடியாகக் காவல்துறையினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory