» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தவெக ஆட்சியிலும் தொடர் கதையாகும் கனிம வளக் கடத்தல்? பொதுமக்கள் புகார்!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:20:20 PM (IST)
புளியரை சோதனைச் சாவடி வழியாக கேரளாவுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் வலுத்துள்ளது.
தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி வழியாக அண்டை மாநிலமான கேரளாவுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் ஜல்லி, கற்கள் மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவது தொடர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும், பொதுமக்களுக்குப் பாதிப்பும் ஏற்பட்டு வருகின்றன.
இதனை நிரந்தரமாகக் கட்டுப்படுத்த, கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் கனிம வளங்களுக்குப் 'பாஸ்' வழங்கும்போதே, ஒரு டன்னுக்கு 2,000 ரூபாய் வீதம் பசுமை வரி விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வந்தால், எல்லையைத் தாண்டிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை இயற்கையாகவே குறையும் என்று கருதப்படுகிறது. கனிமவளக் கடத்தலை முடக்கத் தமிழக அரசு இத்தகைய கடுமையான புதிய வரி விதிப்புத் திட்டத்தைப் பரிசீலித்துச் செயல்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழி: நெல்லையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:55:03 AM (IST)

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)

பாஜக பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீதம்!
வெள்ளி 31, ஜூலை 2026 8:30:28 AM (IST)


