» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மின் பகிர்மான கழக நெல்லை மண்டலத்தின் புதிய தலைமை பொறியாளர் பொறுப்பேற்பு

வியாழன் 9, அக்டோபர் 2025 4:04:39 PM (IST)

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின், திருநெல்வேலி மண்டல புதிய தலைமை பொறியாளராக சந்திரசேகரன் பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளராக, மதுரை பாதுகாப்பு மற்றும் தொலை தொடர்பு மேற்பார்வை பொறியாளராக பணிபுரிந்து வந்த சந்திரசேகரன், பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி மண்டலத்தின் புதிய தலைமை பொறியாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி மற்றும் திருநெல்வேலி மண்டலத்திற்க்கு உட்பட்ட பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அவரை நேரில் சந்தித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory