» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி பஸ் விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தி மன வேதனை அளிக்கிறது: விஜய் இரங்கல்
திங்கள் 24, நவம்பர் 2025 4:05:34 PM (IST)
தென்காசி பஸ் விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இன்று இரு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில், பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:14:47 PM (IST)

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடிகளில் தேர்தல் பொதுப் பார்வையாளர் ஆய்வு
வியாழன் 9, ஏப்ரல் 2026 5:51:20 PM (IST)

அரசு சட்டக் கல்லூரியில் பிரம்மாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 1400 மாணவர்கள் பங்கேற்பு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 1:01:30 PM (IST)

நகைக் கடை சுவரில் துளையிட்டு 1 கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
வியாழன் 9, ஏப்ரல் 2026 8:37:25 AM (IST)

ஆலங்குளம் சூடு: சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா சஸ்பெண்ட் – 3 போலீசார் மீது 4 பிரிவுகளில் வழக்கு!
வியாழன் 9, ஏப்ரல் 2026 8:26:39 AM (IST)

பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் : தேர்தல் நடைமுறைகளை உறுதி செய்ய உத்தரவு
புதன் 8, ஏப்ரல் 2026 5:49:25 PM (IST)

