» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
புதிய நீதிமன்ற கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கீடு: சபாநாயகரிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 10:30:28 AM (IST)

ராதாபுரத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்று சபாநாயகரை நேரில் சந்தித்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் 2019 ம் ஆண்டு முதல் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இயங்கி வருகிறது. ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சமுதாய நலக்கூட கட்டிடத்தில் தற்காலிகமாக நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகாமையில் சர்வே எண் 461/1A3 யில் 3 ஏக்கர் 60 சென்ட் இடம் நீதிமன்றம் மற்றும் நீதிபதி குடியிருப்பு கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இயங்கி வரும் சமுதாய நலகூட கட்டிடம் மிகவும் சேதமடைந்து வருகிறது. ஆகவே புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு போதிய நிதி ஒதுக்க வலியுறுத்தி ராதாபுரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் சங்க தலைவர் இசக்கியப்பன் தலைமையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவை பெற்று கொண்ட சபாநாயகர் விரைவில் நிதி ஒதுக்கி புதிய கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி அளித்தார். இந்நிகழ்வில் அரசு வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன், ராதாபுரம் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் கந்தசாமி வழக்கறிஞர்கள் அன்றன் செல்வகுமார், மனோராஜ், காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:08:41 PM (IST)

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு விரைவில் அமலாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி!
திங்கள் 20, ஏப்ரல் 2026 9:12:04 AM (IST)

தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி நகை - பணம் பறிமுதல் : தேர்தல் நெருங்கும் வேளையில் பரபரப்பு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:50:44 AM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க சக்சம் செயலி: ஆட்சியர் தகவல்!
சனி 18, ஏப்ரல் 2026 5:10:16 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு: ராட்சத பலூனை பறக்கவிட்டார் மாவட்ட ஆட்சியர்!
சனி 18, ஏப்ரல் 2026 4:02:30 PM (IST)

