» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
திருநெல்வேலி மாவட்டம், பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணிகளுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (04.03.2026) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, பெருமணல் மீனவ கிராமத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு மு. அப்பாவு அவர்கள் பணிகளைத் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிச் சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு அவர்கள் தெரிவித்ததாவது: "மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மீனவர்களின் நலனைக் காக்கப் பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பெருமணல் மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இப்பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்தத் தூண்டில் வளைவு நீட்டிப்பு மூலம் கடல் அரிப்பு முற்றிலுமாகத் தடுக்கப்படும். மீன்பிடிப் படகுகளை இயக்குவது எளிதாகும் மற்றும் விபத்துகள் தவிர்க்கப்படும். மீனவர்களின் சமூக-பொருளாதார நிலை உயரும். மீனவர்களின் நலன் கருதி இத்திட்டத்தைத் தந்துள்ள முதலமைச்சர் அவர்களுக்கு மீனவ மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சா. ஞானதிரவியம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் திரு. ராஜத்துரை, அருட்தந்தை பிரபு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு. பாஸ்கர், முக்கியப் பிரமுகர்கள் திரு. ஜோசப் பெல்சி, திரு. அலெக்ஸ் அப்பாவு மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:08:41 PM (IST)

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு விரைவில் அமலாகும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி!
திங்கள் 20, ஏப்ரல் 2026 9:12:04 AM (IST)

தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி நகை - பணம் பறிமுதல் : தேர்தல் நெருங்கும் வேளையில் பரபரப்பு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:50:44 AM (IST)

மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க சக்சம் செயலி: ஆட்சியர் தகவல்!
சனி 18, ஏப்ரல் 2026 5:10:16 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு: ராட்சத பலூனை பறக்கவிட்டார் மாவட்ட ஆட்சியர்!
சனி 18, ஏப்ரல் 2026 4:02:30 PM (IST)

