» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026ன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் - ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் பணி கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கெடுப்பு படிவங்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் டிசம்பர் 14-ம் தேதி வரை திரும்ப பெறப்பட்டன.
இதன் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இளம்பகவத், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 27.10.2025 அன்று நடப்பில் இருந்த வாக்காளர் பட்டியலின் படி ஆண்கள் 7 லட்சத்து 27 ஆயிரத்து 512 பேர், பெண்கள் 7 லட்சத்து 62 ஆயிரத்து 939 பேர், திருநங்கைகள் 234 பேர் ஆக மொத்தம் 14 லட்சத்து 90 ஆயிரத்து 685 வாக்காளர்கள் இருந்தனர்.
இந்த வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணியின் போது ஆண்கள் 78 ஆயிரத்து 288 பேர், பெண்கள் 84 ஆயிரத்து 187 பேர்,திருநங்கைகள் 52 பேர் ஆக மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 527 பேர் இடமாற்றம், கடண்டறிய இயலாமை, இறப்பு, இரட்டை பதிவு, கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப சமர்பிக்காமை ஆகிய காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதில், இறந்தவர்கள் 57 ஆயிரத்து 192 பேர், நிரந்தர குடிபெயர்வு பெற்றவர்கள் 58 ஆயிரத்து 889 பேர், இல்லாதவர்கள் 39 ஆயிரத்து 723 பேர், இதர காரணங்கள் 104 பேர், இரட்டை பதிவு 6 ஆயிரத்து 619 பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் வரைவு வாக்காளர் பட்டியலில் விளாத்திகுளம் தொகுதியில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 947 பேரும், தூத்துக்குடியில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 461 பேரும், திருச்செந்தூரில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 631 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 54 பேரும், ஓட்டப்பிடாரத்தில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 536 பேரும், கோவில்பட்டியில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 529 பேரும், மாவட்டத்தில் 6 லட்சத்து 49 ஆயிரத்து 224 ஆண்கள், 6 லட்சத்து 78 ஆயிரத்து 752 பெண்கள், 182 திருநங்கைகள் ஆக மொத்தம் 13 லட்சத்து 28 ஆயிரத்து 158 பேர் உள்ளனர்.
மேலும் வாக்குச்சாவடிகள் வாரியாக பட்டியலில் இடம்பெறாதவர்களின் விவரங்கள் பொதுமக்கள் அறிவதற்கு ஏதுவாக வெளியிடப்படும். இந்த பட்டியல் தொடர்பாக உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனை மனுக்களை 18.1.2026 வரை அளிக்கலாம். மேலும், 1.1.2026-ஐ தகுதி நாளாக கொண்டு தகுதி பெற்ற வாக்காளர்களும் பட்டியலில் பெயர் சேர்க்க மனு அளிக்கலாம். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த மனுக்கள் பெறப்படும். பின்னர் 17.2.2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரபு, தேர்தல் பிரிவு தாசில்தார் தில்லைபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை பணிகளின் தரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!!
சனி 20, டிசம்பர் 2025 9:20:36 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை : சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
புதன் 17, டிசம்பர் 2025 12:26:29 PM (IST)

ரவுடியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை : 2 மகள்களுக்கும் தீவிர சிகிச்சை!!
புதன் 17, டிசம்பர் 2025 11:54:59 AM (IST)


JosephmasilmaniDec 20, 2025 - 09:55:03 AM | Posted IP 162.1*****